Kankeyanodai Info

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எமதூரின் பல்வேறு செய்திகளை இவ் வலைப் பக்கத்தின் ஊடாக அனைவருக்கும் தெரியப் படுத்துவது எமது பிரதான நோக்கமாகும்;
ஓடை மகனாக இனைய தளத்தில் இனையும் நெஞ்சங்களுக்கு எனது சலாத்தை தெரிவிப்பதோடு நம் அனைவரையும் ஒன்றினைக்க உதவியாக இருக்கும் ஓடையின் இனையத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் (ஜசாகலாஹு ஹைரன்)

முன்னொரு காலத்தில் இருந்த கஷ்டமான அத்தியவசிய தேவைகள் இல்லாத பயங்கரவாத சூழல் என்பவற்றை தாண்டி ஓடைமண் அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. (அல்ஹம்துலில்லாஹ்) முன்னைய காலத்திலிருந்து நாம் முஸ்லிம்களாக இஸ்லாமிய கலாசாரத்திற்கு கட்டு பட்டு வாழ்ந்து வருகின்றோம்

.எதிர்கால சமூகமும் இதே போன்று கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். எதிர்கால தலைவர்களுக்கு இன்றைக்கு வழங்கப்படக்கூடிய நன் நடத்தை கல்வி போன்றவையே சிறப்பான சமூதாயத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது. எமது ஊரில் தற்பொழுது நிலவி வரும் சூழ் நிலையில் மது பாணம் போதைவஸ்துபோன்ற எமக்கு முற்றிலும் ஹறாமாக்கப்பட்ட போதை வஸ்துக்களை எமது இளைஞர்கள் சிலர் பழக்கப்படுத்தி அதற்கே அடிமையாவது மிகவும் பரிதாபமான விடயம்.

எமது சிறுவர்களும் இவ்வாறானவற்றை கானும் போது அவர்களுடைய என்னங்களும் மாறுபட்டு செல்கின்றன . சிறுவர்களுக்கு சிறுவயதில் குர்ஆனை ஓதக்கற்றுக்கொடுப்பதோடு அதற்குரிய பொருள் மற்றும் விளக்கங்களை கற்றுக்கொள்ள விஷேட வகுப்புக்களையோ வேறு வழிகளையோ செய்வதன் மூலமே மார்க்கத்தில் சொல்லப்படும் அனைத்து விடையங்களையும் கடைபிடித்து வளர ஆரம்பிக்கின்றனர். இதற்குன்டான முயற்சிகளை எடுப்பது எமது ஒவ்வொருவர் மீதும் கடைமையாக இருக்கின்றது .

வேற்று மத கலாசாரத்துக்கு மத்தியில் வாழும் நமக்கு இவ்வாறன கற்ப���கட்டல்கள் அவசியமாகக் காணப்படுகின்றது.எமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு ஒருவர் கூட எம் மத்தியில் மதுப்பாவனையாளராக இருந்திருக்க முடியாது.இன்றைக்கும் இவ்வாறான நடவடிக்கை எடுக்காவிடப்பட்டால் நாளைக்கு எமமத்தியில் மது இருந்து கொண்டேதான் இருக்கும் ஒவ்வொருவரும்எடுக்கும் முயற்சிகளுக்கும் அல்லாஹ் துனைபுரிவானாக(ஆமின்)

{என்மூச்சோடுகலந்தஓடைமண்னை இறுதி மூச்சுவரை தொடர அல்லாஹ் அருல் புரிவானாக }

எமதூரின் காலத்தால் அழியாத நிகழ்வுகளையும்,எமதூர் அபிவிருத்தி பற்றிய கருத்துக்களையும் நீங்கள் எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
நீங்கள் அனுப்ப விரும்பும் செய்திகளின் முழுமையான தொகுப்பினை (புகைப்படங்கள் ,வீடியோக்கள் ,Etc....)

எமது மின் அஞ்சல் முகவரி:[email protected]

தொலைபேசி இல: +94750524552