நிலவரசு கண்ணன்

Name : M.NILAVARASU KANNAN

Age : 44 YEARS

Education :

1. B.Com - Madurai Kamaraj University , Full time

2. M.S. - Pondicherry Central University, Full time

3. Post MScDiploma in Environment, Education &

Communication - Centre for Environment Education, Ahmedabad

4. Birth Place: Nagercoil, Kanyakumari District, Tamilnadu

5. Family Details:

Father: Late P. Mahalingam, Rtd. Teacher of Holy Cross Christian High School, Nagercoil

Mother: Late M. Vasantha, Housewife

Sisters: Two married

Brothers: Two married

நான்.... நிலவரசு கண்ணன். இயற்பெயர் கண்ணன். சேர்த்துக் கொண்டது நிலவரசு. சொந்த ஊர் கன்னியாகுமரியிலுள்ள நாகர்கோவில் நகரம். அந்த நகரத்தின் ஒரு பகுதியான கோட்டாறு என்ற இடமே நாங்கள் ஆதி முதல் வாழ்ந்த ஊர். நான் பிறந்ததும் அங்கேயே. தந்தை பணியாற்றிய ஒரு மிசனரி பள்ளியில் முதலில் படித்தேன். பின் அந்நகரின் ஒரு உயர்தரப் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்தது. பட்டப் படிப்பு தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில். பட்டப் படிப்பு முடிந்து ஏழாண்டுகள் நாகர்கோவில் நகரத்தில் இலக்கிய மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடு பட்டேன். இந்தப் பத்தாண்டு காலத்தில்தான் எனது சிறகுகள் விரிந்தன. முதலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்களிலும், பின்னர் புரட்சிகர மாணவர் பேரவையிலும் பங்கெடுத்தேன். இந்தக் காலத்தில் என் அனுபவங்களைத் திரட்டி வலைப்பூ வடிவில் எழுதி வருகிறேன். இக்காலக் கட்டத்திற்குப் பின் புதுவை மத்திய பல்கழகத்தில் மேற்படிப்பும், அதன் பின் அகமதாபாத்தில் உயர்கல்வியும். புதுவையிலிருக்கும் போது சில அரசியல் முயற்ச்சிகள். மனிதப் பிளவுகள் கூர்மையடைந்ததும் எனது சொந்த சூழலும் காரணமாயின. அதன் பின் வேலை. தனியான வாழ்க்கை. இப்போது உங்களுடன் இணைந்து. எனக்குப் பிடித்தது அணியமாக்கலும், படிப்பும், எழுத்தும். பிடிக்காதது இவற்றிற்கு எதிரானவை....எதிரானவர்கள்....மற்றவை பின்னர்.